வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம் | Tamilnadu Land Record


வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம்..

பொதுவாக அனைவரும் ஏதோ ஒரு தேவைக்காக பணத்தை தினமும் சம்பாதித்து வருகிறோம்.

அதில் நமது தேவைகளை பூர்த்தி செய்தது போக மீதும் உள்ள பணத்தை வைத்து சிலர் சொத்து வாங்கி சேர்க்கின்றனர்.

இப்படி இருக்கும் பட்சத்தில் சொத்து வாங்குவது வேண்டும் என்றால் கொஞ்சம் ஈஸியாக இருக்கலாம்.

ஆனால் அந்த சொத்தினை உரிமை கொண்டாடி பிரிப்பது மிகவும் கடுமையான ஒரு விஷயமாக உள்ளது. அதிலும் ஒரு சிலர் வீட்டில் நிறைய நபர்கள் இருப்பார்கள்.

சிலர் வீட்டில் கணவன் மனைவி என இரண்டு நபர்கள் மட்டும் தான் இருப்பார்கள் பிள்ளைகள் அவர்களுக்கு இருக்காது. இப்படி வாரிசு எதுவும் இல்லாமல் இருக்கும் சொத்து யாருக்கு சொந்தம் என்பது பலருடைய கேள்வியாகவும் மற்றும் குழப்பமாகவும் உள்ளது.

பொதுவாக சொத்து என்றால் அவர்கள் குடும்பத்தில் உள்ள நபர்கள் உரிமை கொண்டாடி எப்படியாவது அதனை சரிபாதியாக பிரித்து வாங்கி விடுவார்கள்.

இதே கணவன் மனைவி இருவர் மட்டும் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பிள்ளைகள் எதுவும் இல்லை என்றால் அவர்களுடைய அத்தகைய சொத்தானது வாரிசு இல்லாத சொத்து என்று அழைக்கப்படும்.

கணவன் மனைவி இருவரும் இறந்த பிறகு இத்தகைய வாரிசு இல்லாத சொத்தானது இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு மட்டுமே சொந்தம் ஆகும். 
இத்தகைய இரண்டாம் நிலை வாரிசு என்பது கணவர் உடன் பிறந்த சகோதரர் மற்றும் சகோதரி அல்லது மனைவி உடன் பிறகு சகோதரி மற்றும் சகோதரர் இவர்களை மட்டுமே குறிப்பிடுகிறது. ஆகவே வாரிசு இல்லாத சொத்து இவர்களுக்கு மட்டுமே சொந்தம் ஆகும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை
close